உள்ளூர் செய்திகள்
ஆவடியில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி ரூ.1½ லட்சம் பறிப்பு
- ஆவடி, பூந்தமல்லி சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது.
- மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென கார்த்திக்கை வழிமறித்து சரமாரியாக தாக்கினர்.
ஆவடி:
ஆவடி, பூந்தமல்லி சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு ஊழியராக கார்த்திக் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இன்று மதியம் அவர் ரூ.1 1/2 லட்சத்தை ஆவடி வீட்டு வசதிவாரிய குடியிருப்பு அருகே உள்ள வங்கியில் செலுத்த மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென கார்த்திக்கை வழிமறித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.1 1/2 லட்சத்தை பறித்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து உதவி கமிஷனர் புருஷோத்தமன், இன்ஸ்பெக்டர் டில்லிபாபு விசாரணை நடத்தி வருகிறார்கள்.