உள்ளூர் செய்திகள்

வரதட்சனை கேட்டு கொடுமைபடுத்தியதாக கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் மனு

Published On 2023-01-24 08:53 GMT   |   Update On 2023-01-24 08:53 GMT
  • எனது கணவருக்கும், ஊராட்சி தலைவி ஒருவருக்கும் இருக்கும் தொடர்பு தான் இதற்கு காரணம்.
  • போலீசார் இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் என்னையே மிரட்டுகின்றனர்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 23 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் தனது உறவினர்கள் மற்றும் கிராம மக்களுடன் வந்து கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 6 மாதத்திற்கு முன்பு எனக்கு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது எனது குடும்பத்தினர் 16 பவுன் நகை, புல்லட் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை சீதனமாக கொடுத்தனர்.

ஆனால் திருமணமான 2 மாதத்திலேயே எனது கணவர் என்னை தாக்கி அடித்து துரத்தி விட்டார். எனது கணவருக்கும், ஊராட்சி தலைவி ஒருவ ருக்கும் இருக்கும் தொடர்பு தான் இதற்கு காரணம் ஆகும்.

எனது கணவர் மீது அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.

ஆனால் போலீசார் இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் என்னையே மிரட்டுகின்றனர்.

எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து எனது கணவரை ஊராட்சி மன்ற தலைவியிடம் இருந்து மீட்டுத் தாருங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News