தி.மு.க. சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா
- உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மதியழகன் எம். எல். ஏ. கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத் திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம். எல். ஏ. கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் டேம்.வெங்கடேசன், துணைச் செயலாளர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, பொருளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர் கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், நாகராசன், நகர செயலாளர் நவாப், ஒன்றிய செயலாளர் கோவிந்தன், பேரூர் கழக செயலாளர் ஜே.கே.எஸ்., பாபு, அன்பரசு, மாணவரணி மாவட்ட அமைப்பாளர் ஜேயேந்திரன், கவுன்சிலர் செந்தில், மகளிரணி புஷ்பா, கனல் சுப்பிர மணி, உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.