உள்ளூர் செய்திகள்

பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

Published On 2023-09-27 04:08 GMT   |   Update On 2023-09-27 04:08 GMT
  • பெரம்பலூர் மாவட்டத்தில்பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
  • கடைசி நாள் வரும் அக்டோப்ர் 16-ந்தேதி மற்றும் நெல் சம்பா பயிருக்கு நவம்பர் 15-ந்தேதி கடைசி நாளாகும்.

பெரம்பலூர்,  

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மக்காச்சோளம், பருத்தி மற்றும் நெல் போன்ற பயிர்கள் எதிர்பாராத இயற்கை இடர்படுகளால் பாதிக்கப்படும்பொழுது விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கிட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் வரும் அக்டோப்ர் 16-ந்தேதி மற்றும் நெல் சம்பா பயிருக்கு நவம்பர் 15-ந்தேதி கடைசி நாளாகும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் மேற்கூறிய பயிர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் நடப்பில் உள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா மற்றும் நடப்பு பருவ அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரிமியம் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News