உள்ளூர் செய்திகள்

மரத்திலிருந்து தவறி விழுந்து முதியவர் சாவு

Published On 2023-08-11 12:26 IST   |   Update On 2023-08-11 12:26:00 IST
  • பெரம்பலூர் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்து முதியவர்
  • அவரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்

குன்னம் 

பெரம்பலூர் அருகே உள்ள குன்னம் சீதா ராமாபுரம் மேற்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் ( வயது 68). இவர் வீட்டில் ஆடு மாடுகள் வளர்த்து வருகிறார்.

தனது ஆடுகளுக்கு இலை பறிக்க அங்குள்ள ஒரு மரத்தில் ஏறினார். அப்போது எதிர்பாராத விதமாக தவறு கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உறவினர்கள் அவரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News