உள்ளூர் செய்திகள்

சமையல் தொழிலாளி தீயில் கருகி சாவு

Published On 2023-08-11 06:59 GMT   |   Update On 2023-08-11 06:59 GMT
  • விசேஷ நிகழ்ச்சிக்கு சமைத்த போது சம்பவம்
  • எதிர்பாராத விதமாக அவரது கைலியில் தீப்பிடித்தது.

குன்னம் 

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா பண்டாரவடை திருமணஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மக்கள் பாஷா (வயது 45).சமையல் கலைஞர். இவர் ஆர்டரின் பேரில் பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடி காடு ஜமாலியா நகரில் உள்ள ஒரு வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு சமையல் செய்யச் சென்றார். அங்கு சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது கைலியில் தீப்பிடித்தது.

பின்னர் மளமளவென உடல் முழுவதும் பரவியது. சக தொழிலாளர்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் மக் புல் பாஷா சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News