உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி வாலிபர்

Published On 2022-09-19 12:28 IST   |   Update On 2022-09-19 12:28:00 IST
  • வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்தார்.
  • புறவழிச்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே குரும்பலூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் பூவரசன்(வயது 26). இவர் நேற்று அதிகாலை பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் குரும்பலூர் புறவழிச்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் முகம் நசுங்கி சம்பவ இடத்திலேயே பூவரசன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், பூவரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News