உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

Published On 2022-08-19 09:12 GMT   |   Update On 2022-08-19 09:12 GMT
  • மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்தார்
  • எந்திரங்களில் பணம் நிரப்பும் வேனை ஓட்டி வந்தார்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் அய்யலூர் வ. உ. சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்கிரண் ( வயது 32). இவர் ஒரு தனியார் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் வேனை ஓட்டி வந்தார்.

இந்த நிலையில் வழக்கம்போல் பணியை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் சிறுவாச்சூர் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார்.

எடைய சமுத்திரம் பிரிவு சாலையில் சென்றபோது ராஜ்கிரண் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்த போதிலும் இன்று காலை ராஜ்கிரண் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி தவமணி என்ற மனைவி உள்ளார். விபத்து குறித்து மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News