உள்ளூர் செய்திகள்

பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்

Published On 2022-07-10 13:49 IST   |   Update On 2022-07-10 13:49:00 IST
  • வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி அரசுமேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்புகூட்டம் நடைபெற்றது.
  • கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் 12 பேர், உள்ளாட்சிபிரதிநிதிகள் இரண்டு பேர், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ஒருவர், ஒருங்கிணைப்பாளராக ஆசிரியர் ரவி என மொத்தம் 20 பேர் கொண்டகுழு உருவாக்கப்பட்டது.

பெரம்பலூர்:

பூலாம்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி நடை பெற்ற பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தொழிலதிபர் ட்த்தோ எஸ்பி.ரகதீஷ்குமார் பள்ளியின் வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து தர தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி அரசுமேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்புகூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் முரளி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகதலைவர் எஸ்.மோகன்ராஜ்,மற்றும் கட்டிட குழு தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் மலேசிய தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசும் போது மாணவர்களின் வளர்ச்சிக்கு ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் பூலாம்பாடி அரசுமேல்நிலைப்பள்ளியின் வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து தர தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் 12 பேர், உள்ளாட்சிபிரதிநிதிகள் இரண்டு பேர், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ஒருவர், ஒருங்கிணைப்பாளராக ஆசிரியர் ரவி என மொத்தம் 20 பேர் கொண்டகுழு உருவாக்கப்பட்டது. பள்ளியின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று குழுவினர் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

இந்தகூட்டத்தில் பெற்றோர்கள்ஆசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News