உள்ளூர் செய்திகள்

எம்.சி.ஏ. முதலாமாண்டு தொடக்க விழா

Published On 2022-10-25 12:28 IST   |   Update On 2022-10-25 12:28:00 IST
  • எம்.சி.ஏ. முதலாமாண்டு தொடக்க விழா நடைபெற்றது
  • எம்.சி.ஏ. முதலாமாண்டு தொடக்க விழா நடைபெற்றது

பெரம்பலூர்

பெரம்பலூர் ரோவர் பொறியியல் கல்லூரியில் முதுகலை கணினி பயன்பாட்டு துறையின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு துவக்க விழா நடந்தது.

ரோவர் கல்வி நிறுவனங்களின் துணை தலைவர் ஜான் அசோக் வரதராஜன் முன்னிலை வகித்தார். ரோவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் வரதராஜன் தலைமை வகித்து முதலாமாண்டு வகுப்பினை தொடங்கிவைத்து பேசுகையில், மாணவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதோடு, அவர்களிடம் படைப்பாற்றலையும் மேம்படுத்துங்கள் பேராசிரியர்கள் முயற்சி செய்யவேண்டும் என தெரிவித்தார்.

இதில் பேராசிரியர்கள், மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர். முன்னதாக ரோவர் பொறியியல் கல்லூரியின் முதுகலை கணினி பயன்பாட்டு துறை தலைவர் சர்புதின் வரவேற்றார். முடிவில் அலுவலக மேலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News