உள்ளூர் செய்திகள்

பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குரு பூஜை

Published On 2022-07-04 09:28 GMT   |   Update On 2022-07-04 09:28 GMT
  • பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குரு பூஜை நடைபெற்றது.
  • நாயன்மார் சன்னதியில் எழுந்தருளி இருக்கும்

பெரம்பலூர்:

பெரம்பலூர் அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் ஆனிமாதம் மகம் நட்சத்தினரம் அன்று ஆண்டுதோறும் ஸ்ரீ மாணிக்கவாசகருக்கு குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று குருபூஜை விழா நடந்தது.இதையொட்டி காலை 10:30 மணி அளவில் நாயன்மார் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீமாணிக்கவாசகர் பெருமானுக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் 12 மணியளவில் மகா தீபாரதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை சுவாமிநாத சிவாச்சாரியார் நடத்தி வைத்தார் . நிகழ்ச்சியில் திரளான சிவனடியார்கள், வார வழிபாட்டு குழுவினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News