உள்ளூர் செய்திகள்

பிரம்மரிஷி மலையில் மணிமண்டபம் திறப்பு

Published On 2023-07-31 09:15 IST   |   Update On 2023-07-31 09:15:00 IST
  • பிரம்மரிஷி மலையில் மணிமண்படம் திறப்பு விழா
  • நாளை திறப்பு விழா நடைபெற உள்ளது

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் ஸ்ரீராஜகுமார் குருஜி மணிமண்டப திறப்பு விழா நாளை (1ம்தேதி) நடைபெறுகிறது.மகாசித்தர்கள் டிரஸ்ட் சார்பில் எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் அன்னை சித்தர் ஸ்ரீராஜகுமார் குருஜியின் 3-ம் ஆண்டு குருபூஜை விழா நேற்று (30ந்தேதி) காலை 8 மணியளவில் ஸ்ரீகணபதி ஹோமத்துடன் பூர்வாக பூஜை பணிகள் தொடங்கியது. மாலை 5 மணியளவில் பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலிலிருந்து சிறப்பு ஊர்வலம் துவங்கி எளம்பலூர் பிரம்மரிஷி மலையாடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வர் கோயிலில் முடிவடைந்தது. ஊர்வலத்தின்போது கோலாட்டம், நடனம் ஆகியவை நடைபெற்றது. காகன்னை ஈஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து இன்று (31ம்தேதி) 2 மற்றும் 3ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது.நாளை (1ம்தேதி) காலை 8 மணியளவில் 4ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று 11 மணியளவில் மணிமண்டப திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் விழா நடைபெறுகிறது. தொடர்ந்து மகாதீபாரனையும், பிரசாதம் வழங்கப்படுகிறது. பின்னர் 200 சாதுக்களுக்கு வஸ்திரதானமும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலியும், அன்னதானமும் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை டிரஸ்ட் இணை நிறுவனர் ரோகிணி மாதாஜி, தவயோகி சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவயோகி தவசிநாதன் சுவாமிகள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News