உள்ளூர் செய்திகள்

குரு பூஜை விழா தொடக்கம்

Published On 2023-07-29 11:06 IST   |   Update On 2023-07-29 11:06:00 IST
  • ஸ்ரீராஜகுமார் குருஜி 3-ம் ஆண்டு குரு பூஜை விழா நாளை தொடங்குகிறது
  • எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் நடைபெறுகிறது

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் ஸ்ரீராஜகுமார் குருஜியின் 3 ஆம் ஆண்டு குருபூஜை விழா மற்றும் மணிமண்டப திறப்பு விழா, கும்பாபிஷேகம் ஆகிய விழா 3 நாட்கள் நடைபெறுகிறது.மகாசித்தர்கள் டிரஸ்ட் சார்பில் எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் அன்னை சித்தர் ஸ்ரீராஜகுமார் குருஜியின் அதிஷ்டான மணி மண்டப திறப்பு விழா கும்பாபிஷேகம் மற்றும் 3ஆம் ஆண்டு குருபூஜை விழா நாளை (30ந்தேதி) காலை 8 மணியளவில் ஸ்ரீகணபதி ஹோமத்துடன் பூர்வாக பூஜை பணிகள் தொடங்குகிறது. அன்று மாலை 4 மணியளவில் பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலிலிருந்து சிறப்பு ஊர்வலம் துவங்கி எளம்பலூர் பிரம்மரி ஷிமலையாடிவாரத்தில் உள்ள காகன்னைஈஸ்வர் கோயிலில் முடிவடைகிறது. ஊர்வலத்தின்போது கோலாட்டம், நடனம் ஆகியவை நடைபெறுகிறது. பின்னர்முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கிறது.தொடர்ந்து 31ம்தேதி 2 மற்றும் 3ம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெறுகிறது. 1ம்தேதி காலை 10 மணியளவில் மணி மணிமண்டப திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் விழா நடைபெறுகிறது. தொடர்ந்து மகாதீபாராதனை, பிரசாதம் வழங்கப்படுகிறது. பின்னர் 200 சாதுக்களுக்கு வஸ்திரதானமும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலியும் வழங்கப்படுகிறது.ஒசூர் ஸ்ரீவேலனடிமை சுவாமிகள் குருபூஜையை நடத்தி வைக்கிறார். 3 நாட்கள் முழுவதும் இன்னிசை நிகழ்ச்சிகள், சிறப்பு சொற்பொழிவுகள், அருளாசிகள் நடைபெறுகிறது. இதில் வேலூர் ஸ்ரீலஸ்ரீ மகானந்த சித்தர் சுவாமிகள், ஆதினம் குருமகாசந்நிதானம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிய பராமாச்சாரியார் சுவாமிகள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.விழா ஏற்பாடுகளை டிரஸ்ட் இணை நிறுவனர் ரோகிணி மாதாஜி, தவயோகி சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவயோகி தவசிநாதன் சுவாமிகள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News