உள்ளூர் செய்திகள்

அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் 4-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

Published On 2022-08-29 10:27 GMT   |   Update On 2022-08-29 10:27 GMT
  • அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் 4-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட
  • கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி

பெரம்பலூர்:

குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் தற்காலிகமாக பணிபுரியும் கவுரவ, மணி நேர விரிவுரையாளர்கள் விடுமுறை நாளான நேற்றும் 4-வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு 3 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் நிறைவேற்றி தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்கள் சென்னை தலைமை செயலகத்துக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்திப்பதற்காக இரவில் புறப்பட்டு சென்றனர்.

Tags:    

Similar News