மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
- வாலிகண்டபுரம், ரஞ்சன்குடி அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது
- எம்.எல்.ஏ. பிரபாகரன் வழங்கினார்
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவும் மற்றும் மிதிவண்டி நிறுத்தும் இடம் திறப்பு விழாவும் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் செல்வராசு அனைவரையும் வரவேற்று பேசினார். பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். வாலிகண்டபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கலியம்மாள் அய்யாக்கண்ணு முன்னிலை வகித்தார், தொடர்ந்து பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மாணவ, மாணவிகளுக்கு விளையில்லா மிதி வண்டிகளை வழங்கினார்.தொடர்ந்து ரஞ்சன்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார், தலைமை ஆசிரியர் ராஜா உடன் இருந்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் கலைச்செல்வி, வேப்பந்தட்டை ஒன்றிய குழு தலைவர் ராமலிங்கம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மகாதேவி ஜெயபால், ஒன்றிய குழு உறுப்பினர் சாவித்திரி மகாராஜன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அமராவதி, பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் கண்ணபிரான், உட்பட வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் வீரையன் நன்றியுரை கூறினார்.