உள்ளூர் செய்திகள்

இலவச மிதிவண்டி வழங்கும் விழா

Published On 2022-09-08 07:30 GMT   |   Update On 2022-09-08 07:30 GMT
  • இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடந்தது
  • அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு வழங்கப்பட்டது

பெரம்பலூர்:

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி பெரம்பலூர் அருகே உள்ள செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை தலைமையாசிரியர் பொன்னுதுரை (பொறுப்பு) தலைமையில் நடைபெற்றது.

இதில் பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கினர். ஆலத்தூர் மேற்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சோமு.மதியழகன் முன்னிலை வகித்தார். பள்ளி முதுகலை ஆசிரியர் கலியமூர்த்தி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் மதிவாணன். தெய்வானைலதா, செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் கலாதங்கராசு, இளைஞரணி துணை அமைப்பாளர் சிவசங்கர், ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ராஜா, விஜய்அரவிந்த், முன்னாள் மாணவர் சங்கத்தின் செயலாளர் ராஜாசிதம்பரம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் முதுகலை ஆசிரியர் விஜய நாராயண பெருமாள் நன்றி கூறினார்.

Tags:    

Similar News