உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி
- துங்கபுரம் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது
- ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் துங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும்நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகளை துங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அழகுதுரை செல்வமணி, ஒன்றிய குழு உறுப்பினர் கருணாநிதி,தலைமை ஆசிரியர் செல்வகுமார், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அம்பிகா, தர்மலிங்கம் ஆகியோர் வழங்கினார்கள் உடன்ஆசிரியர்கள் மற்றும்மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் 145 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கப் பட்டது.