உள்ளூர் செய்திகள்
- பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடந்தது
- தி,மு.க.அரசை கண்டித்து நடந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூரில் தி.மு.க. அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து, பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. பெரம்பலூர் புறநகர் பஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பா.ஜ.க. பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், நகர தலைவர் ஜெயக்குமார், நிர்வாகிகள் மகிழ்அசோக், பாலாஜிதேவேந்திரன் மற்றும் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்."