ஏகாம்பரேஸ்வரர் கோவில் எழுத்தர்விஷம் குடித்து தற்கொலை
- தீராத உடல் உபாதை காரணமாக தற்கொலை என தகவல்
- பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர், செட்டிக்குளத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு எதிர்புறம் மலைமேல் பாலதண்டாயுதபாணி முருகன் கோவில் உள்ளது. இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான இக்கோவில்களில் எழுத்த ராக தண்டாயுதபாணி(வயது 50) என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு பிரகதாம்பாள்(42), என்ற மனைவியும் ஹரிஹரன்(15) என்ற மகனும் உள்ளனர். இவருக்கு தீராத உடல் உபாதை இருந்ததாக கூறப்ப டுகிறது. பல இடங்களில் சிகிச்சை செய்தும் பலனளிக்கவில்லை. இதன் காரணமாக அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலமாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரதிருவிழா தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில் கோயில் எழுத்தர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.