உள்ளூர் செய்திகள்

2 பேருக்கு கொரோனா

Published On 2023-03-26 08:35 GMT   |   Update On 2023-03-26 08:35 GMT
  • பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது
  • மீண்டும் பாதிப்பு தலைதூக்கி உள்ளது

பெரம்பலூர்

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கடந்த பல மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாமல் இருந்து வந்தது. தற்போது 2 மாவட்டங்களிலும் மீண்டும் கொரோனா பாதிப்பு தலை தூக்க தொடங்கியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 2 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 3 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 2 பேரும் வீட்டு தனிமையிலும், அரியலூர் மாவட்டத்தில் 3 பேரும் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

Tags:    

Similar News