பழமையான ஆவணங்களை பாதுகாத்திட ஒத்துைழப்பு வழங்க வேண்டுகோள்
- பழமையான ஆவணங்களை பாதுகாத்திட பொதுமக்கள் ஒத்துைழப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
பெரம்பலூர்:
பழமையான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகள் அனைத்தும் ஆய்வு பணிகளுக்கு கிடைக்கும் வகையில் தனியார் நிறுவனங்களிடமிருந்தும், தனி நபர்களிடமிருந்தும் அவற்றை சேகரித்து பாதுகாப்பாக வைத்திட தமிழ்நாடு ஆவணங்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையின் ஆணையர், அவர்களின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் தமிழ்நாடு ஆவண காப்பகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு இக்குழு வினால் புணர மைக்கப்பட்டு டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் நகல் எடுத்து வைக்க நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும். மேலும் இத்தகைய பதிவுகள் கால வெள்ளத்தாலும் மனித அலட்சியத்தாலும் நமது நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் தடயங்களை அழிவுகளில் இருந்து பாதுகாக்கப்படும்.
அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களின் மூலமாக கிராமங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் மற்றும் உரிமையாளரின் பெயர்கள், தனியார் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட நபர்கள் போன்றவற்றின் விவரங்கள் தமிழ்நாடு ஆவணக் காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆய்வு துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.
எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தனிப்பட்ட பழமையான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகள் இருப்பின் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது சென்னை தமிழ்நாடு ஆவண காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆய்வு ஆணையரிடம் ஒப்படைக்கலாம்.
பெரம்பலூர் மாவட்டத்தின் வரலாற்று ஆவண சேகரிப்பு மற்றும் வரலாற்று ஆவணங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றிய செய்தியை பரப்புவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவி த்துள்ளார்.