உள்ளூர் செய்திகள்

44-வது உலக செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி

Published On 2022-07-23 09:55 GMT   |   Update On 2022-07-23 09:55 GMT
  • 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி நடந்தது
  • 188 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்

பெரம்பலூர்:

44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் கைகளில் செஸ் போர்டு வடிவிலான 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28 முதல் ஆகஸ்ட் 10 வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதுவரை இந்தியாவில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளிலேயே மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் இந்த ஒலிம்பியாட் போட்டியில் உலகின் முதல் நிலை கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 188 நாடுகளை சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விளம்பர பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக பெரம்பலூர்தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 200 மாணவிகளின் கைகளில் செஸ் போர்டு, செஸ் போர்டில் உள்ள நாணயங்கள் போன்ற வடிவிலான மெஹந்தி வரையப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

Similar News