உள்ளூர் செய்திகள்

செல்வமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

Published On 2023-07-21 06:58 GMT   |   Update On 2023-07-21 06:58 GMT
  • செல்வமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது
  • 9-ஆம் ஆண்டை முன்னிட்டு நடந்தது

பெரம்பலூர்:

பெரம்பலூர் 15-வது வார்டு புதிய காலனியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீசெல்வமாரியம்மன் கோவிலில் 9-ஆம் ஆண்டு ஆடி மாத பால்குட ஊர்வலம் வெகு சிறப்பாக நடந்தது.

பெரம்பலூர் ஆலம்பாடி ரோடு, 15 வது வார்டு புதிய காலனியில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்வமாரியம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ நாககன்னி அம்மன் திருக்கோவில் 9 ஆம் ஆண்டு ஆடி மாத பால்குடம், விளக்கு பூஜை நடந்தது.இதில் பக்தர்கள் பால் குடம் எடுத்து மேளதாளங்கள் முழங்க ஊர்லமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலா பிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பி க்கப்பட்டது. பின்னர் குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதில் நகராட்சி கவுன்சிலர் சிவக்குமார், திமுக கிளை செயலாளர் பரிதி நீலமேகம் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News