உள்ளூர் செய்திகள்

இரு சக்கர வாகனம் மீது கார் மோதி துணி வியாபாரி பலி

Published On 2023-07-16 13:46 IST   |   Update On 2023-07-16 13:46:00 IST
  • இரு சக்கர வாகனம் மீது கார் மோதி துணி வியாபாரி பலியானார்
  • வியாபாரத்திற்கு சென்ற போது சம்பவம்

பெரம்பலூர்,

விருதுநகர் மாவட்டம் சுத்தமடம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் மகன் சிவக்குமார் (வயது 45). இவர் பெரம்பலூர் வெங்க டேசபுரம் கோல்டன் கேட்ஸ் பள்ளி அருகில் தங்கி மோட்டார் சைக்கிளில் சென்று துணி வியாபாரம் செய்து வந்தார்.

வழக்கம் போல் சிவக்குமார் இன்று காலை தொழுதூருக்கு துணி வியாபாரம் செய்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 4 ரோடு பாலம் அருகே தனியார் பெட்ரோல் பங்க் முன்பு சென்று கொண்டு இருந்தார்.

அப்போது சிவகங்கையில் இருந்து சென்னை நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அந்த காரை சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் தவசி மகன் கவியரசன் (வயது 19) என்பவர் ஓட்டி வந்தார். இந்த கார் எதிர்பார விதமாக சிவக்குமார் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதியது. இதில் சிவக்குமார் தூக்கி வீசப்பட்டு ரத்த ெவள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

கார் டிரைவர் கவியரசன், காரில் இருந்த காளையார் கோவிலை சேர்ந்த நடராஜ் (43), அசோக்குமார் ஆகிேயார் காயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவகுமார் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பெரம்பலூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News