உள்ளூர் செய்திகள்

வீட்டிற்குள் புகுந்து 8 பவுன் நகை-ரூ.50 ஆயிரம் கொள்ளை

Published On 2023-06-27 12:44 IST   |   Update On 2023-06-27 12:44:00 IST
  • வீட்டிற்குள் புகுந்து 8 பவுன் நகை-ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
  • புகாரின் பேரில் கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெள்ளுவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). இவரது மனைவி ஜோதி. இவர்கள், தங்களது மகன் பரமேஸ்வரன், மருமகள் ராணி ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காைல ராஜேந்திரனும், அவரது மனைவி ஜோதியும் பாண்டகப்பாடியில் உள்ள கோவிலுக்கு சென்றனர். மேலும் வீட்டை பூட்டிவிட்டு பரமேஸ்வரன் வெளியூருக்கு வேலைக்கும், ராணி ஆடு மேய்க்கவும் சென்றுள்ளனர்.

பின்னர் மாலையில் பரமேஸ்வரன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News