உள்ளூர் செய்திகள்
பெரம்பலூரில் 8-ந்தேதி மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.
- பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர்கள் தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம்.
பெரம்பலூர் ;
பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் 8ம்தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமையில் நடைபெறவுள்ளது.
பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர்கள் தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம் என மின்வாரிய செயற்பொறியாளர் அசோ க்குமார் தெரிவித்துள்ளார்.