பெரம்பலூரில் அன்னை சித்தரின் 2-ம் ஆண்டு குருபூஜை விழா - நாளை நடை பெறுகிறது
- பெரம்பலூரில் அன்னை சித்தரின் 2-ம் ஆண்டு குருபூஜை விழா நாளை நடை பெறுகிறது
- பேரூர் ஆதினம் குருமகா சந்நிதானம் சாந்தலிங்க மருதாசவல அடிகாளார், சூரியனார் கோவில் ஆதினத்தின் குருமகாசந்திதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் முன்னின்று குருபூஜையை நடத்தி வைக்கின்றனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் பிரம்மரிஷி மலை காகபுஜண்டர் ஸ்ரீதலையாட்டி சித்தரின் சீடரான அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிகள் மாக சித்தர்கள் டிரஸ்ட் ஆரம்பித்து பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் ஸ்ரீகாகன்னை ஈஸ்வரர் சித்தர் கோவிலை ஸ்தாபித்து, ஆசிரமம், கோசாலை அமைத்து ஆன்மீக பணி, நோய்ப்பிணி போக்கும் பணி, தான, தர்ம காரியங்கள் செய்து வந்தார்.
அவர் கடந்த 2020 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3-ந்தேதி ஜீவசமாதி அடைந்தார். அவரது இரண்டாமாண்டு குருபூஜை விழா நாளை (11-ந்தேதி) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. பேரூர் ஆதினம் குருமகா சந்நிதானம் சாந்தலிங்க மருதாசவல அடிகாளார், சூரியனார் கோவில் ஆதினத்தின் குருமகாசந்திதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் முன்னின்று குருபூஜையை நடத்தி வைக்கின்றனர்.
விழாவையொட்டி திருவருட்பா பாராயணம், கோ பூஜை, அஸ்வ பூஜை, 210 சித்தர்கள் யாகபூஜை, ஸ்ரீகாகன்னை ஈஸ்வரருக்கு அபிஷேகம் மற்றும் பூஜை, சாதுக்களுக்கு வஸ்திரதானம், அன்னதானம் போன்றவை நடைபெறுகிறது. விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உமாமகேஸ்வரி, குமரகுரு, கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, எஸ்.பி. மணி, எம்.எல்.ஏ. பிரபாகரன், முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதி ரகுபதி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ராஜேந்திரன், பெருமாள், இசையமைப்பாளர் கங்கை அமரன், திருச்சி தலைமை நீதிபதி கருணாநிதி உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை மகா சித்தர்கள் டிரஸ்ட் இணை நிறுவனர் ரோகினி மாதாஜி, இயக்குநர்கள் தவயோகிகள் சுந்தரமகாலிங்கம், தவசிநாதன் மற்றும் ராதா ஆகியோர் செய்து வருகின்றனர்.