உள்ளூர் செய்திகள்

2 பவுன் தாலிச் செயின் பறிப்பு

Published On 2023-07-20 14:13 IST   |   Update On 2023-07-20 14:13:00 IST
  • மாடு மேய்க்க சென்ற பெண்ணின் 2 பவுன் தாலிச் செயின் பறிப்பு
  • கைவரிசை காட்டிய கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு

குன்னம், 

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா மருவத்தூர் இலுப்பை குடி நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு.இவருக்கு அந்தப் பகுதியில் விவசாயத் தோட்டம் உள்ளது. மேலும் ஆடு, மாடுகளும் வளர்த்து வருகிறார்.இந்த நிலையில் அவரது மனைவி அகிலாண்டம் (வயது 65). வழக்கம் போல் காலை தங்கள் கால்நடைகளுடன் வயலுக்குச் சென்றார்.பின்னர் மேய்ச்சலுக்கு தோட்டத்தில் கட்டி இருந்த மாடுகளை அவிழ்த்துக் கொண்டு வீடு திரும்பினார்.இலுப்பூர்- சாத்தனூர் ரோட்டில் வந்த போது 2 வாலிபர்கள் இரு வேறு மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். பின்னர் திடீரென அவர்கள் அகிலாண்டத்தை வழிமறித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.அதிர்ச்சி அடைந்த அவர் திருடன் திருடன் கத்தினார். ஆனால் கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டனர்.பின்னர் இது குறித்து துரைகண்ணு மருவத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News