உள்ளூர் செய்திகள்
வாலீஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
- வாலீஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது
- சோம வாரத்தை முன்னிட்டு நடந்தது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற வாலீஸ்வரர் கோவிலில் நேற்று கார்த்திகை மாத கடைசி சோம வாரத்தை முன்னிட்டு 1,008 சங்காபிஷேக பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.