உள்ளூர் செய்திகள்

சின்னசேலம் அருகே பயங்கரம் : தகராறை விலக்க சென்ற தாயை அடித்துகொன்ற மகன்

Published On 2022-10-25 07:33 GMT   |   Update On 2022-10-25 07:33 GMT
  • பொது சொத்து 1.80 ஏக்கர் நிலம் ,பொதுக் கடன் ரூ. 16 லட்சம் இருக்கிறது.
  • தாய் என்று கூட பாராமல் சுரேஷ்குமார் தனது மனைவி, உறவினருடன் சேர்ந்து தாக்கினார்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பாக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் இறந்து விட்டார். அவரது மனைவி வேலம்மாள் (வயது 60). இவர்களுக்கு மகள் செல்வி (33), மகன்கள் சுரேஷ்கு மார்(32), வேல்முருகன் ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு பொது சொத்து 1.80 ஏக்கர் நிலம் உள்ளது. பொதுக் கடன் ரூ. 16 லட்சம் இருக்கிறது. எனவே வேலம்மாள் சொத்து மற்றும் கடனையும் சரிசமமாக வாய் வழியாக பிரித்தார்.இதனை சுரேஷ்குமார் ஏற்க மறுத்தார். இதனால் அவர்கள் இடையே தகராறு வந்தது.

நேற்று வேல்முருகனுக்கும் , சுரேஷ்குமார், இவரது மனைவி கவுதமி, உறவினர் கவுதம் ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.இதனை தடுக்க சென்ற தாய் வேலம்மாள் மீது தாய் என்று கூட பாராமல் சுரேஷ்குமார் தனது மனைவி, உறவினருடன் சேர்ந்து தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வேலம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இது குறித்து மகள்செ ல்வி கொடுத்த புகாரின் அடிப்படையில் சுரேஷ்குமார், கவுதமி, கவுதம் ஆகியோர் மீது வழக்கு பதிந்து கீழ்கு ப்பம் போலீசார் விசார ணை மேற்கொண்டு வருகி ன்றனர்.

Tags:    

Similar News