உள்ளூர் செய்திகள்

சொத்து வரியை செலுத்தி ஊக்கத்தொகை பெறுங்கள்-கீழப்பாவூர் பேரூராட்சி அறிவிப்பு

Published On 2023-04-24 08:58 GMT   |   Update On 2023-04-24 08:58 GMT
  • சொத்துவரி செலுத்தும் உரிமையாளர்கள் 5 சதவீத ஊக்கத்தொகை பெற தகுதி உடையவர்கள் ஆகிறார்கள்.
  • பொதுமக்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொள்ளலாம்.

தென்காசி:

நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கண்ணன் அறிவுறுத்துதலின்படி கீழப்பாவூர் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கீழப்பாவூர் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023-24-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தும் சொத்துவரி உரிமையாளர்கள் தங்களது நிகர சொத்துவரி தொகையில் 5 சதவீத ஊக்கத்தொகை பெற தகுதி உடையவர்கள் ஆகிறார்கள். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி தங்களின் சொத்து வரிகளை பேரூராட்சியில் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையினை பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News