உள்ளூர் செய்திகள்

தாரமங்கலம் அருகே காதல் திருமணம் செய்த மகளை விறகு கட்டையால் அடித்த பெற்றோர்

Published On 2023-03-20 15:16 IST   |   Update On 2023-03-20 15:16:00 IST
  • கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரை பெற்றோர் எதிப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார்.
  • மேஷாஸ்ரீயை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் விறகு கட்டையால் தாக்கியுள்ளனர்.

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகிலுள்ள கோண கப்பாடி கிராமம், போத்த னூர் பகுதியை சேர்ந்தவர் மேஷா ஸ்ரீ (வயது 19). இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரை பெற்றோர் எதிப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் அவரது தந்தை சேட்டு என்பவருக்கும் மூர்த்தி குடும்பத்தாருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி இரு தரப்பினருக்கும் இடையே தகராறூ ஏற்பட்டது. அப்போது மேஷாஸ்ரீயை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் விறகு கட்டையால் தாக்கியுள்ள னர்.

இதுபற்றி தாரமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி இரு தரப்பை சேர்ந்த சேட்டு, சித்ரா, சிவன், கவுரி, மணி, சுசி, வெங்கடேஷ், மகேஸ்வரி, கந்தசாமி, லட்சுமி ஆகிய 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News