உள்ளூர் செய்திகள்

கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

பரமத்திவேலூர் பகுதி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

Published On 2023-03-22 15:17 IST   |   Update On 2023-03-22 15:17:00 IST
  • பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
  • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள அம்மன் மற்றும் குலதெய்வ கோவில்களில் பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பாண்டமங்கலம் அருகே கோப்பணம் பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், அரசாயி அம்மன், மாசாணி அம்மன் கோவில், பரமத்தியில் உள்ள அங்காளம்மன், பரமத்திவேலூரில் உள்ள மாரியம்மன், பழைய பை-பாஸ் ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன், பேட்டையில் உள்ள புதுமாரியம்மன், பகவதி அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

இதேபோல், நன்செய் இடையாறு, பாண்டமங்கலம், கொந்தளம், சேளூர், அ.குன்னத்தூர், அய்யம்பாளையம், ஆனங்கூர், வடகரையாத்தூர் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் மற்றும் குலதெய்வ கோவில் களில் உள்ள அம்மனுக்கு பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி யளித்தார். இதில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர். 

Tags:    

Similar News