உள்ளூர் செய்திகள்

ஆலங்குளத்தில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் பனை விதை நடும் பணி நடந்தது.

ஆலங்குளத்தில் பனை விதைகள் நடும் விழா

Published On 2023-10-16 09:17 GMT   |   Update On 2023-10-16 09:17 GMT
  • அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு தொட்டியான்குளம் குளக்கரையில் 3 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டனர்.

ஆலங்குளம்:

ஆலங்குளம் பூ உலகை காப்போம் மன்றத்தின் சார்பில் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு தொட்டியான்குளம் குளக்கரையில் 3 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு பனை விதைகள் நடவு பணியை தொடங்கி வைத்தார். இதில் ஆலங்குளம் யூனியன் முன்னாள் துணை சேர்மன் தங்கசெல்வம், முன்னாள் கவுன்சிலர்கள் மோகன் லால், ராஜதுரை, மாவட்ட பிரதிநிதி அன்பழகன், பூ உலகை காப்போம் மன்றத்தின் அங்கத்தி னர்கள், அசுரா அமைபின் பொறுப்பாளர்கள், பள்ளி மாணவர்கள், தன்னார்வ லர்கள் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பூ உலகை காப்போம் மன்றத்தின் தலைவர் ராஜா வரவேற்று பேசினார். ஆலோசகர் இளங்கோ, அசுரா மன்றத்தின் ராஜா, பிரபாகர் ஆகியோர் கருத்துரை வழங்கினர். மன்ற உறுப்பினர்கள் நிகழ்ச்சி க்கான ஏற்பாட்டி னை செய்திருந்தனர்.

Tags:    

Similar News