உள்ளூர் செய்திகள்

எலிபேஸ்ட் தின்று பெயிண்டர் தற்கொலை

Published On 2023-07-05 15:16 IST   |   Update On 2023-07-05 15:16:00 IST
  • தாயார் விஜயா தனது மகனிடம் வேலைக்கு செல்லுமாறு கூறி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
  • வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று எலிபேஸ்டை தின்று மயங்கி கிடந்தார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி விஜயா. இவர் தனியார் பள்ளி ஆசிரியையாக உள்ளார்.

இவர்களது மகன் முல்லைஅரசு (வயது20). பெயிண்டரான இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

இதுகுறித்து அவரது தாயார் விஜயா தனது மகனிடம் வேலைக்கு செல்லுமாறு கூறி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் மனவேதனையில் இருந்த முல்ைலஅரசு கடந்த 29-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று எலிபேஸ்டை தின்று மயங்கி கிடந்தார்.

உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முல்லைஅரசு நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது தாய் விஜயா பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News