உள்ளூர் செய்திகள்

சீர்காழியில் கண்காணிப்பு மையம் திறக்கபட்டது.

போக்குவரத்து காவல்துறை சார்பில் கண்காணிப்பு மையம் திறப்பு

Published On 2023-11-09 09:33 GMT   |   Update On 2023-11-09 09:33 GMT
  • சீர்காழி நாகேஸ்வர முடையார் கோயில் பகுதியில் கண்காணிப்பு மையம் திறக்க பட்டது.
  • போக்குவரத்தை சீரமைக்க அமைக்கப்பட்டது.

சீர்காழி:

போக்குவரத்து காவல்துறை சார்பில் சீர்காழி நாகேஸ்வர முடையார் கோயில் மூன்று சாலை சந்திப்பில் பகுதியில் போக்குவரத்து சீரமைக்கும் வகையில் ஓலிப்பெருக்கியுடன் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடை பெற்றது.

விழாவிற்கு போக்குவரத்து காவல் சப்-இன்ஸ்பெக்டர் பிறைசந்திரன் தலைமை வகித்தார்.

சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் பங்கேற்று கண்காணிப்பு மையத்தினை திறந்து வைத்தார்.

இதில் போக்குவரத்து காவலர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News