உள்ளூர் செய்திகள்

திருமாவளவன் தலைமையில் எழும்பூரில் இப்தார் நோன்பு திறப்பு

Published On 2023-04-16 10:15 GMT   |   Update On 2023-04-16 10:15 GMT
  • இஸ்லாமிய பேரவை மாநில செயலாளர் அப்துர் ரகுமான் தலைமை தாங்கினார்.
  • நிர்வாகிகள் முத்து முகமது மக்கா கலீல், அக்பர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னை:

விடுதலை சிறுத்தை கட்சி இலக்கிய ஜனநாயக பேரவை சார்பில் 19-ம் ஆண்டு இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி எழும்பூரில் நடந்தது. இஸ்லாமிய பேரவை மாநில செயலாளர் அப்துர் ரகுமான் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முத்து முகமது மக்கா கலீல், அக்பர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆளுர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ வரவேற்றார், கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி இப்தார் உரையாற்றினார்.

இதில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எம்.அப்துல் ரகுமான், ஜவாஹிருல்லா எம்.எல்.எ, நவாஸ்கனி எம்.பி, எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், இயக்குனர் அமிர், திரைப்பட தயாரிப்பாளர் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தெற்கெல்லை போராளி கொடிக்கால் ஷேக், அப்துல்லாஹசன், "நாஞ்சில் நாட்டின் ஒரு சமுகப்போராளி" என்ற நூலை திருமாவளவன் வெளியிட ஏ.ஆர்.ஜாபர் சாதிக், இயக்குனர் அமீர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியை ஏ.ஆர். முகமது சலீம் ஒருங்கிணைத்தார்.

Tags:    

Similar News