உள்ளூர் செய்திகள்

பொன் முத்தையா பாண்டியன் குத்துவிளக்கு ஏற்றியபோது எடுத்தபடம்.


சிவகிரி அருகே அங்கன்வாடி மையம் திறப்பு

Published On 2022-11-13 07:58 GMT   |   Update On 2022-11-13 07:58 GMT
  • தேவிபட்டணம் ஊராட்சியில் புதிதாக அங்கன்வாடி மைய திறப்பு விழா நடைபெற்றது.
  • வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொன் முத்தையா பாண்டியன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

சிவகிரி:

சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணம் கிராம ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.

யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் மனோகரன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பொன்ராஜ், ஊராட்சி மன்றத் தலைவர் வழக்கறிஞர் ராமராஜ், துணைத் தலைவர் மாடசாமி, செயலர் பொன் செந்தில்குமார், தேவிபட்டணம் ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், கிளை செயலாளர் முருகன், தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், ராமர், உள்ளார் மணிகண்டன், விக்கி, அங்கன்வாடி பணியாளர்கள், தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News