உள்ளூர் செய்திகள்

புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் தேக்கத்தொட்டி பயன்பாட்டிற்கு வந்தது.

மீனவ கிராமத்தில் 3 குடிநீர் தேக்கதொட்டி திறப்பு

Published On 2023-11-23 09:51 GMT   |   Update On 2023-11-23 09:51 GMT
  • மீனவ கிராமத்தில் குடிநீர் தேக்கத்தொட்டி பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டது.
  • குடிநீர் பிரச்சனையால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.

சீர்காழி:

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் 3இடங்களில் குடிநீர் தேக்கத்தொட்டி அமைத்து பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டது.

திருமுல்லைவாசல் ரோட்டரி சங்கம் சார்பில், ரோட்டரி ஆளுனர் வருகை விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ரோட்டரி துணை ஆளுனர் ஜி.வி.என்.கணேஷ் தலைமை வகித்தார்.

தலைவர் பி.பிரபாகர், செயலாளர் வி.தேவேந்திரன், பொருளாளர் என்.பைசல்அலி முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் நல்ல குடிநீர் வழங்கும் விதமாக போர்வெல் அமைத்து குடிநீர் எடுத்து குழாய் மூலம் மூன்று இடங்களில் குடிநீர் தேக்கத்தொட்டி வாயிலாக குடிநீர் வழங்கிட பயன்பாட்டிற்கு மாவட்ட ஆளுனர் ஜி.செங்குட்டுவன் அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுனர் ராமன் மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்தார் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News