உள்ளூர் செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது எப்படி?- ஆளுநருக்கு சபாநாயகர் கேள்வி

Published On 2023-03-10 07:46 GMT   |   Update On 2023-03-10 07:46 GMT
  • அரசியல் சட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
  • ஆன்லைன் ரம்மி தடை சட்டம் மாநில பட்டியலில் உள்ளதாக மத்திய அமைச்சரே கூறி உள்ளார்.

சென்னை:

ஆன்லைன் ரம்மி தடை மசோதா திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் தாமதப்படுத்தி, திருப்பி அனுப்பியதற்கான காரணம் தெரியவில்லை. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம் அல்லது விளக்கம் கேட்கலாம்.

* சட்டமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என எந்த சட்டத்தை ஆளுநர் குறிப்பிடுகிறார் என்பது தெரியவில்லை. அவசர சட்டத்திற்கும் சட்ட முன்வடிவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

* ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை இயற்ற தமிழக சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.

* ஆன்லைன் ரம்மி தடை தொடர்பான அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தது எப்படி?

* நீதிபதி சந்துரு குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா கொண்டுவரப்பட்டது. அரசியல் சட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

* ஆன்லைன் சூதாட்டம் தடை சட்ட விவகாரத்தில் ஆளுநருக்கு என்ன அழுத்தம் வந்தது என்பது தெரியவில்லை.

* ஆன்லைன் ரம்மி தடை சட்டம் மாநில பட்டியலில் உள்ளதாக மத்திய அமைச்சரே கூறி உள்ளார்.

* சட்டம் இயற்ற சட்டமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறதா என்பதை அரசியலமைப்பு சட்டத்தை பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News