உள்ளூர் செய்திகள்

ஓசூரில் ஆசிரியர் தின விழாவையொட்டி 45 வார்டுகளில் உள்ள அரசு பள்ளிகளின் ஆசிரிய- ஆசிரியையர் கவுரவிப்பு

Published On 2022-09-06 08:31 GMT   |   Update On 2022-09-06 08:31 GMT
  • ஆசிரியர் தின விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
  • பாராட்டி நினைவுப்பரிசும், சான்றிதழும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

ஓசூர், 

ஆசிரியர் தின விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, ஓசூரில் மாநகராட்சி கல்விக்குழு சார்பில் அரசு ஆர்.விஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப், உருது மேல்நிலைப்பள்ளி, முல்லை நகர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார்.

இதில் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ், துணை மேயர் ஆனந்தய்யா, மற்றும் புருஷோத்தம ரெட்டி, யசஸ்வினி மோகன், மோசின் தாஜ் நிசார் அகமது உள்ளிட்ட கல்விக்குழு உறுப்பினர்கள், மேலாண்மைக்குழு துணைத் தலைவர் ஏஜாஸ் அகமது, தி.மு.க. பகுதி செயலாளர் ராமு, பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியையர் ,பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவின்போது, மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டு பகுதிகளில் உள்ள அரசு பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளை பாராட்டி நினைவுப்பரிசும், சான்றிதழும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Tags:    

Similar News