உள்ளூர் செய்திகள்
கார்த்திகை சதய திருநாளை முன்னிட்டு தருமபுரி கோட்டை கோவிலில் கல்யாண காமாட்சி திருக்கல்யாண விழா
- கல்யாண காமாட்சி திருக்கல்யாண வைபவ நிகழ்வு நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தருமபுரி,
தருமபுரி நகர் கோட்டை கோவில் அருள் தரும் அன்னை கல்யாண காமாட்சி அம்பிகை கோவிலில் கார்த்திகை சதய திருநாளை முன்னிட்டு சிவசக்தி ஐக்கிய நிலையில் திருக்காட்சியாக கல்யாண காமாட்சி திருக்கல்யாண வைபவ நிகழ்வு நடைபெற்றது.
தருமபுரி கோட்டை கோவில் ஸ்ரீ கல்யாண காமாட்சி கோவிலில் புதன்கிழமை மாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நேற்று காலை முதல் கல்யாண காமாட்சி, மல்லிகார்ஜூன சுவாமி, திருமேனிகள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு கோவில் வளாகத்தில் கல்யாண காமாட்சி திருக்கல்யாண வைபவ விழா சிறப்புற நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு நிகழ்வின் நிறைவாக மஞ்சள், குங்குமம், திருமாங்கல் சரடு, வளையல், சௌபாக்கிய பொருட்கள் மற்றும் அன்னதான பிரசாதமும் வழங்கப்பட்டது.