உள்ளூர் செய்திகள்

மேலுமலை தேசிய நெடுஞ்சாலை பகுதியை படத்தில் காணலாம்.

மேலுமலை தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் இருளில் தத்தளிப்பு -மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை

Published On 2022-09-30 15:27 IST   |   Update On 2022-09-30 15:27:00 IST
  • 3 கிலோ மீட்டர் தூரம் வரையிலான சாலை மலை மீது செல்வது போல ஏற்ற இறக்கமாக செல்லும்.
  • சி.சி.டி.வி. கேமரா அமைக்க வேண்டும் என வாகன ஒட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி சூளகிரி, வேப்பனப்பள்ளி தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் மேலுமலை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. மேலுமலை முதல், கனவாய், எண்ணகோள்புதூர் வரையிலான 3 கிலோ மீட்டர் தூரம் வரையிலான சாலை மலை மீது செல்வது போல ஏற்ற இறக்கமாக செல்லும்.

இந்த சாலையில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சாலை பல்வேறு மாநிலங்களுக்கும் செல்லலாம்.

இந்த நிலையில் மேலுமலை சாலை இருள் சூழ்ந்த பகுதி என்பதால் வெளிச்சம் இல்லாமல் அவதிபடுகின்றனர். வாகனங்கள் மிகவும் குறைந்த வேகத்தில் செல்வதால் கொள்ளையர்கள் வழிமறித்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதும் நடைபெற்று வருகிறது.

இதனால் இந்த சாலையில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நவீன மின்விளக்குகள், சி.சி.டி.வி. கேமரா அமைக்க வேண்டும் என வாகன ஒட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags:    

Similar News