உள்ளூர் செய்திகள்
சூளகிரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு
- பிளாஸ்டிக் பைகள் உபயோகிக்க கூடாது.
- நோய் இல்லா தமிழ் மாநிலமாக மாற்றலாம் என்று அனைத்து வியாபாரி களுக்கும் அறிவுறுத்தப் பட்டது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டாரவளர்ச்சி அலுவலகத்தில் பி.டி.ஒ.சிவக்குமார் தலைமையில் , பிளாஸ்டிக் பைகள் உபயோகிக்க கூடாது.
காசநோய், புற்றுநோய், சுகாதார சீர்கேடு வருவதால் அதை மாற்றி அதற்கு பதிலாக துணிப்பைகளை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். அப்படி துணிப்பைகளை நடைமுறைக்கு கொண்டு வந்தால் நோய் இல்லா தமிழ் மாநிலமாக மாற்றலாம் என்று அனைத்து வியாபாரி களுக்கும் அறிவுறுத்தப் பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு சூளகிரி ஊராட்சி மற்ற தலைவர் கலைசெல்வி ராமன், துணை பி.டி.ஒ.க்கள் உமா சங்கர், முகிலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.