உள்ளூர் செய்திகள்

ஓசூர் - ராயக்கோட்டை சாலையில் குடியிருப்பு மீது முறிந்து விழுந்த மரம்

Published On 2022-10-02 15:06 IST   |   Update On 2022-10-02 15:06:00 IST
  • திடீரென மரம் முறிந்து விழுந்தது.
  • குடியிருப்பு பகுதி மக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.

ஓசூர்,

ஓசூரில், ராயக்கோட்டை சாலையில் உள்ள முல்லை நகரில் குடியிருப்பு மீது திடீரென மரம் முறிந்து விழுந்தது.

இதனால் இப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நேற்று இரவு முதல் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் குடியிருப்பு பகுதி மக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.

மரமும் இதுவரை அகற்றப்படவில்லை.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதில் கவனம் செலுத்துவார்களா? என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

Similar News