உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

சின்னமனூர் அருகே மினிலாரி மோதி முதியவர் பலி

Published On 2023-11-10 05:47 GMT   |   Update On 2023-11-10 05:47 GMT
  • சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது மதுரை நோக்கி வந்த லாரி பயங்கரமாக மோதியது.
  • தூக்கிவீசப்பட்ட முதியவர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

சின்னமனூர்:

சின்னமனூர் அருகே கீழபூலானந்தபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்(70). விவசாயி. இவர் சாலையை கடக்க முயன்றபோது கம்பத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த திராட்சை லாரி பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்ட ஜெயக்குமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் லாரி டிரைவர் நாராயணதேவன்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவரை கைது செய்து மினிலாரியையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News