தனியார் பள்ளி பஸ்களை அதிகாரிகள் ஆய்வு செய்த போது எடுத்த படம்.
தனியார் பள்ளி பஸ்களை அதிகாரிகள் ஆய்வு
- போச்சம்பள்ளி, மத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் பள்ளி பஸ்களை ஆய்வு செய்தனர்.
- குறைபாடுகள் உள்ள பள்ளி வாகனங்கள் மறு ஆய்வு செய்த பிறகு தான் இயக்கப்பட வேண்டும்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட போக்கு வரத்து அலுவலர்கள், தனியார் பள்ளி பஸ்களை வருடாந்திர கூட்டாய்வு செய்யும் பணி நேற்று நடந்தது.
இந்த ஆய்வில் ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, போச்சம்பள்ளி, மத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் பள்ளி பஸ்களை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது டிரைவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி, ஆர்.டி.ஓ. பாபு, ஊத்தங்கரை டி.எஸ்.பி., பார்த்திபன், தாசில்தார் திருமலைராஜன்,பிரேக் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் விளக்கி கூறினர். பிறகு 125 பஸ்களை ஆய்வு செய்தனர்.
இதில் சிறு குறைகள் இருந்த, 18 பஸ்களை, தங்கள் குறைகளை சரிசெய்து கிருஷ்ணகிரி அலுவலகத்திற்க்கு சென்று மறு ஆய்வு செய்த பிறகு தான் பள்ளி வாகனங்கள் இயக்கப்பட வேண்டும் என, கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் ஆர்.டீ.ஓ. காளியப்பன் கூறினார். ஊத்தங்கரை தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான குழுவினர், தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.