உள்ளூர் செய்திகள்

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ஒடிசா வாலிபர் தற்கொலை முயற்சி

Published On 2023-09-29 09:19 GMT   |   Update On 2023-09-29 09:19 GMT
  • வாலிபர் நாசரின் செல்போனை திருடிவிட்டு தப்ப முயன்றார்.
  • ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சென்னை:

விழுப்புரத்தை சேர்ந்த நாசர் இப்ராகிம் (46) என்பவர் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் டிக்கெட் எடுப்பதற்காக நின்றார். அப்போது ஒடிசாவை சேர்ந்த பாரத் நாயக் (24) என்ற வாலிபர் நாசரின் செல்போனை திருடிவிட்டு தப்ப முயன்றார்.

அவரை சகபயணிகள் விரட்டி பிடித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசில் ஒப்படைத்தனர். அப்போது பாக்கெட்டில் இருந்த பிளேடால் பாரத் கழுத்தில் கீறிக் கொண்டார். லேசான காயம் அடைந்த அவருக்கு முதலுதவி அளித்து விசாரித்தனர்.

இந்த நிலையில் கழிவறை உள்ளே சென்ற பாரத், ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Tags:    

Similar News