சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டம்
- சத்துண ஊழியர் சங்கம் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது.
- ஊழியர்கள் மடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.
தஞ்சாவூர்:
தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு மையங்கள் மூலம் சத்துணவு ஊழியர்களைக் கொண்டு அமல்படுத்த வேண்டும். காலி பணியிடங்க ளை நிரப்பிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துண ஊழியர் சங்கம் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் வீராச்சாமி தலைமை தாங்கினார்.
மாவட்டத் துணைத் தலைவர்கள் அறிவழகன், கருணாநிதி, ராமாமிர்தம், சுகந்தி, இணை செயலாளர்கள் நாவலரசன், முத்துராமன், மதிவாணன், மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினார்.
இதில் கலந்துகொண்ட சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநில செயலாளர் கோதண்டபாணி நிறைவுறையாற்றினார்.
இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் சிவ ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் ரங்கசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வட்ட செயலாளர்கள் தமிழ் மாறன், அஜய்ராஜ், துறை தணிக்கை மற்றும் மாநிலத் தலைவர் அம்பேத்கர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் மதியழகன் நன்றி கூறினார்.