உள்ளூர் செய்திகள்
நார் தொழிற்சாலையில் சரக்கு வாகனத்தை திருடிய வடமாநில வாலிபர்
நார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மனோஜ் தனது குடும்பத்தினர் மற்றும் பொருட்களுடன் சரக்கு வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது.
நெகமம்:
ஒடிசாவை சேர்ந்தவர் மனோஜ்(வயது35). இவர் கோவை மாவட்டம் நெகமம் அடுத்த கள்ளிப்பட்டியில் உள்ள தனியார் நார் தொழிற்சாலையில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி மனோஜ் மற்றும் தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து நெகமம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் நடத்திய விசாரணையில் நார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மனோஜ் தனது குடும்பத்தினர் மற்றும் பொருட்களுடன் சரக்கு வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.